search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மயக்குறியே சிரிக்குறியே..Anchor-யிடம் உருட்டிய ஷிகர் தவான்
    X

    மயக்குறியே சிரிக்குறியே..Anchor-யிடம் உருட்டிய ஷிகர் தவான்

    • ஷிகர் தவான் இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
    • தவான் இந்திய அணிக்கு கடைசியாக 2022-ம் ஆண்டு விளையாடினார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் தற்போது இந்திய அணியில் இடம் கிடைக்காமல் திணறி வருகிறார். அவர் இந்திய அணிக்கு கடைசியாக 2022-ம் ஆண்டில் ஒருநாள் போட்டியிலும் 2021-ம் ஆண்டில் டி20 போட்டியிலும் விளையாடினார்.

    அவர் இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர் ஐபிஎல்லில் அதிக ரன் குவித்தவர்களில் ஒருவராக உள்ளார். 217 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 6600 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். டி20 போட்டியில் 2 சதங்கள் அடித்துள்ளார்.

    கிரிக்கெட் விளையாடவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் செய்து ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளார். மனைவியை பிரிந்து வாழும் அவர், தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக பேட்டியளித்துள்ளார்.

    அவரை பேட்டியெடுக்க வந்த பெண் தொகுப்பாளரிடம் என்னை நீங்கள் மிகவும் கவர்ந்து விட்டீர்கள் என தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இருவரும் பேசியது:-

    தவான்: பார்த்ததும் ஈர்ப்பதை நம்புகிறேன். எனக்கு அதில் நம்பிக்கை உண்டு.

    தொகுப்பாளர்: எனக்கும் நம்பிக்கை இருக்கிறது.

    தவான்: நீங்களும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டீர்கள்.

    தொகுப்பாளர்: இந்த பேட்டி நிச்சயமாக 100 சதவீதம் அனைவரையும் கவரும் என கூறினார்.

    அந்த பேட்டியில் சச்சின், விராட் கோலி, டோனி போன்றவர்கள் பற்றியும் வெளிப்படையாக பேசினார். மேலும் தனது மகன் குறித்தும் உருக்கமாக பேசினார்.

    Next Story
    ×