search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மதுரை அணிக்கு 130 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திருப்பூர் தமிழன்ஸ்
    X

    மதுரை அணிக்கு 130 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திருப்பூர் தமிழன்ஸ்

    • திருப்பூர் அணியில் அதிகபட்சமாக மான் பாஃப்னா ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் சேர்த்தார்.
    • மதுரை அணி 17 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சேலத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற மதுரை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.

    அதிகபட்சமாக மான் பாஃப்னா ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் சேர்த்தார். அரவிந்த் 19 ரன்கள் எடுத்தார். மதுரை அணி தரப்பில் கிரண் ஆகாஷ் 3 விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது. 17 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்த மதுரை அணி, பின்னர் நிதானமாக ஆடியது.

    Next Story
    ×