search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ரஞ்சி டிராபி இறுதி போட்டி: மத்தியபிரதேசம் முதல் முறையாக சாம்பியன் ஆகிறது
    X

    ரஞ்சி டிராபி இறுதி போட்டி: மத்தியபிரதேசம் முதல் முறையாக சாம்பியன் ஆகிறது

    • மத்திய பிரதேச அணியில் 3 வீரர்கள் சதம் அடித்து முத்திரை பதித்தனர்.
    • முதல் இன்னிங்சில் பெற்ற கூடுதல் ரன் மூலம் மத்திய பிரதேச அணி முதல் முறையாக ரஞ்சி கோப்பையை கைப்பற்றுகிறது.

    பெங்களூரு:

    மும்பை-மத்திய பிரரேச அணிகள் மோதும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது.

    மும்பை அணி முதல் இன்னிங்சில் 374 ரன் குவித்தது. சர்பிராஸ்கான் சதம் (134 ரன்) அடித்தார். கவுரவ் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய மத்திய பிரதேசம் பதிலடி கொடுத்தது. நேற்றைய ஆட்டத்தின் முடிவில் மத்திய பிரதேசம் 3 விக்கெட் இழப்புக்கு 368 ரன் எடுத்து இருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது.

    தொடர்ந்து விளையாடிய மத்திய பிரதேசம் அணி மும்பையின் ஸ்கோரை தாண்டி முன்னிலை பெற்றது. 155 ஓவர் வீசி முடிக்கப்பட்டபோது அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 473 ரன் குவித்து இருந்தது.

    4-வது வீரராக களம் இறங்கிய ரஜத் படிதார் சதம் அடித்தார். தொடக்க வீரர் யாஷ் துபே, 3-வது வரிசையில் ஆடிய சுபம் சர்மா ஆகியோர் ஏற்கனவே சதம் அடித்து இருந்தனர். தற்போது மத்திய பிரதேச அணியில் 3-வது வீரர் செஞ்சுரி அடித்து முத்திரை பதித்தார்.

    இந்த போட்டி டிராவில் முடிய வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் பெற்ற கூடுதல் ரன் மூலம் மத்திய பிரதேச அணி முதல் முறையாக ரஞ்சி கோப்பையை கைப்பற்றுகிறது.

    Next Story
    ×