search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆசிய கோப்பை போட்டி: இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா? ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்
    X

    ஆசிய கோப்பை போட்டி: இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா? ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்

    • தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் படேல் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் இடம் பெறலாம் என்று தெரிகிறது.
    • இறுதி போட்டி வாய்ப்பை இழந்த இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    துபாய்:

    15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    6 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகியவை 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெற்றன. வங்காளதேசம், ஆங்காங் முதல் சுற்றில் வெளியேறின.

    'சூப்பர் 4' சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு தடவை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 5 விக்கெட் வித்தியாசத்திலும் 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையிடமும் தோற்றது.

    நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் இந்திய அணி வெளியேற்றப்பட்டது. 2 வெற்றிகளை பெற்ற பாகிஸ்தான்-இலங்கை அணிகள் 11-ந்தேதி நடை பெறும் இறுதி ஆட்டத்தில் மோதுகின்றன.

    இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதுகிறது. இரவு 7.30 மணிக்கு துபாயில் இந்த ஆட்டம் நடக்கிறது.

    இறுதி போட்டி வாய்ப்பை இழந்த இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கும் இதே நிலை தான். இதனால் இந்த ஆட்டத்தின் முடிவு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

    'சூப்பர் 4' ஆட்டங்களில் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் படேல் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் இடம் பெறலாம் என்று தெரிகிறது.

    இரு அணிகளும் இதுவரை மோதிய மூன்று 20 ஓவர் போட்டியிலும் இந்தியாவே வெற்றி பெற்று இருந்தது.

    Next Story
    ×