search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    2-வது இன்னிங்சில் 113 ரன்னில் சுருண்டது இலங்கை- ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
    X

    2-வது இன்னிங்சில் 113 ரன்னில் சுருண்டது இலங்கை- ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

    • ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 70.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 321 ரன்கள் எடுத்தது.
    • இரண்டும் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.

    ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் முதல் டெஸ்ட்டில் விளையாடி வருகின்றனர். டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் 59 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆஸ்திரேலியா தொடங்கியது.

    ஆஸ்திரேலியா அணி 70.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 321 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 109 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. நாதன் லயன் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி 113 ரன்னில் சுருண்டது. இதனால் 4 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது.

    5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி ஆடியது. 4 பந்துகள் மட்டுமே சந்தித்த ஆஸ்திரேலியா 10 ரன்கள் எடுத்தது. இதில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் அடங்கும். இதனால் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டும் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.

    Next Story
    ×