search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து
    X

    இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

    • இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • பட்லர் - அலெக்ஸ் அரை சதம் அடித்து அசத்தினர்.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 168 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பாண்ட்யா, விராட் கோலி அரைசதம் அடித்தனர்.

    இதனையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான அலெக்ஸ் - பட்லர் அதிரடியாக விளையாடினர். 4 ஓவர் மீதம் உள்ள நிலையில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் இங்கிலாந்து அணி 13-ந் தேதி நடக்கும் இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் மோதும்.

    Next Story
    ×