என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    அசலங்கா அசத்தல் சதம்- வங்காளதேசத்துக்கு 280 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை
    X

    அசலங்கா அசத்தல் சதம்- வங்காளதேசத்துக்கு 280 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை

    • இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 279 ரன்கள் குவித்தது.
    • வங்காளதேசம் தரப்பில் தான்சிம் 3 விக்கெட்டுகளையும் ஷரிப் இஸ்லாம், சகீப் அல் ஹசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் வங்காளதேசம்- இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்களாதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிசங்கா - குசல் பெரேரா களமிறங்கினர்.

    பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கிய குசல் பெரேரா 4 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த மெண்டீஸ் 19 ரன்னில் அவுட் ஆனார். அடுத்த சிறிது நேரத்திலேயே நிசங்கா 41 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த சதீரா - அசலங்கா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    சதீரா 41 ரன்களில் இருந்த போது சகீப் ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேத்யூஸ் டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து அசலங்கா - தனஞ்செயா ஜோடி சேர்ந்து ரன் வேகத்தை அதிகரித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தனஞ்செயா தேவையில்லாமல் இறங்கி வந்து அடிக்க முற்பட்டு 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அசலங்கா சதம் அடித்து அசத்தினார். அவர் 108 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் குவித்தது. வங்காளதேசம் தரப்பில் தான்சிம் 3 விக்கெட்டுகளையும் ஷரிப் இஸ்லாம், சகீப் அல் ஹசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    Next Story
    ×