என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    46 பந்தில் சதம் விளாசிய வான் டெர் டுசென்- சென்னைக்கு 244 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை
    X

    46 பந்தில் சதம் விளாசிய வான் டெர் டுசென்- சென்னைக்கு 244 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை

    • வான் டெர் டுசென் - ரியான் ரிக்கல்டன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 200 குவித்தது.
    • சென்னை அணி தரப்பில் நந்த்ரே பர்கர் 2 விக்கெட்டும், சேப்பேர்ட், இம்ரான் தாஹீர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    தென்ஆப்பிரிக்காவில் 'எஸ்.ஏ.20' கிரிக்கெட் லீக் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் இந்த போட்டியின் முதலாவது சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் 2-வது எஸ்.ஏ 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த 10-ம் தேதி தொடங்கியது.

    இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் எம்ஐ கேப் டவுன் - சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி கேப் டவுன் அணியின் தொடக்க வீரர்களாக ரஸ்ஸி வான் டெர் டுசென் - ரியான் ரிக்கல்டன் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி சென்னை அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசி தள்ளினர். அதிரடியாக விளையாடிய வான் டெர் டுசென் 46 பந்தில் சதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 200 குவித்தது. இந்த ஜோடியை இம்ரான் தாஹீர் பிரித்தார்.

    வான் டெர் டுசென் 104 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரி 6 சிக்சர்கள் அடங்கும். அடுத்து வந்த டெவால்ட் ப்ரீவிஸ் 5 ரன்னிலும் லிவிங்ஸ்டன் 12 ரன்னிலும் அவுட் ஆனார்கள். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரியான் ரிக்கல்டன் கடைசி ஓவரில் 98 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் கேப் டவுன் அணி 20 ஓவர் முடிவில் 250 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் நந்த்ரே பர்கர் 2 விக்கெட்டும், சேப்பேர்ட், இம்ரான் தாஹீர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    Next Story
    ×