search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சேப்பாக்கத்தில் குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு ஐ.பி.எல். டிக்கெட் வாங்க சென்ற பெண்
    X

    சேப்பாக்கத்தில் குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு ஐ.பி.எல். டிக்கெட் வாங்க சென்ற பெண்

    • ஒலிபெருக்கி மூலம் குழந்தையின் பெயரை அறிவித்து இந்த குழந்தையின் தாய் உடனடியாக வந்து குழந்தையை பெற்றுக் கொள்ளுமாறு போலீசார் கூறினர்.
    • குழந்தையின் தாயை காவல்துறையினர் கடுமையாக கண்டித்தனர்.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் இடையே ஆட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் மைதானத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களில் நேற்று நள்ளிரவு முதலாகவே ஏராளமானோர் நீண்ட வரிசையில் டிக்கெட் வாங்குவதற்காக காத்திருந்தனர்.

    இந்நிலையில் டிக்கெட் கவுண்டருக்கு வெளியே மூதாட்டி ஒருவர் ஒரு கையில் 6 மாத கை குழந்தையும் மற்றொரு கையில், இரண்டு வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் குழந்தையும் பிடித்தபடி நீண்ட நேரமாக அங்கும் இங்குமாக பதட்டமாக யாரையோ தேடிக் கொண்டிருந்தார்.

    இதுபற்றி மூதாட்டியிடம் விசாரித்தபோது, டிக்கெட் கவுண்டரில் இருந்த ஒரு பெண் இந்த இரு குழந்தைகளும் அந்த மூதாட்டியிடம் சிறிது நேரம் குழந்தைகளை பார்த்துக்கொள்ளுமாறு கூறியதாக தெரிவித்தார்.

    நீண்ட நேரம் ஆகியும் இரு குழந்தைகளையும் பெற யாரும் வராத நிலையில் மூதாட்டியின் கையில் இருந்த அந்த பச்சிளம் குழந்தை பசியால் அழுதது. மூதாட்டி என்ன செய்வது என்று தெரியாமல் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார்.

    இது தொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த போலீசார் காவல் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கி மூலம் குழந்தையின் பெயரை அறிவித்து இந்த குழந்தையின் தாய் உடனடியாக வந்து குழந்தையை பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். அதனைக் கேட்டு அங்கு வந்த பெண் ஒருவர் மூதாட்டியின் கையில் இருந்த குழந்தையை பெற்றுக்கொண்டு இரு குழந்தைகளும் தனது பேரப்பிள்ளைகள் எனக்கூறி வேகமாக அங்கிருந்து நகர முற்பட்டார். இதனைப் பார்த்து சந்தேகம் அடைந்த பெண் காவல் ஆய்வாளர் அந்த பெண்ணை கோபமாக தலையில் தட்டினார்.

    மேலும் அந்த குழந்தையின் தாய் வந்தால் மட்டுமே குழந்தை ஒப்படைக்கப்படும் என அங்கிருந்த காவலர்கள் கூறியதை அடுத்து டிக்கெட் கவுண்டரின் வரிசையில் நின்று கொண்டிருந்த அந்த இரு குழந்தைகளின் தாயை அந்த பெண்மணி அழைத்து வந்தார்.

    பின்னர் குழந்தையின் தாயை கடுமையாக கண்டித்த காவல்துறையினர் அந்த இரு பெண்களின் முகவரியையும் பெற்றுக் கொண்டு விசாரணைக்கு பின்னர் குழந்தையை ஒப்படைத்தனர்.

    Next Story
    ×