search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    2வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி - ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இந்தியா
    X

    ஷிகர் தவான்

    2வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி - ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இந்தியா

    • ஒருநாள் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா தொடர்ந்து 14 வெற்றியை பதிவு செய்துள்ளது.
    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே 161 ரன்களை எடுத்துள்ளது. அடுத்து ஆடிய இந்தியா 167 ரன் எடுத்து வென்றது.

    ஹராரே:

    இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 38.1 ஓவரில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சீன் வில்லியம்ஸ் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். ரியான் பர்ல் 39 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ராகுல் ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    ஷிகர் தவான், ஷுப்மன் கில் தலா 33 ரன்கள் எடுத்தனர். இஷான் கிஷன் 6 ரன்னில் அவுட்டானார். தீபக் ஹூடா 25 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இந்தியா 25.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் 43 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-0 என ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.

    Next Story
    ×