search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    வங்காள தேச அணிக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய பெண்கள் அணி
    X

    வங்காள தேச அணிக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய பெண்கள் அணி

    • வங்காளதேசம் தரப்பில் ருமானா அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷபாலி வர்மா அரை சதம் அடித்து அசத்தினார்.

    பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா - வங்காள தேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.

    முதல் விக்கெட்டுக்கு ஷபாலி வர்மா- மந்தனா ஜோடி 96 ரன்கள் எடுத்தனர். 47 ரன்னில் மந்தனா எதிர் பாராத வகையில் ரன் அவுட் ஆனார். ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷபாலி வர்மா அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 55 ரன்கள் எடுத்த போது போல்ட் முறையில் வெளியேறினார்.

    16 ஓவரில் இந்திய அணி 125 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தொடர்ந்து 2 விக்கெட்டுகளை இழந்தது. ரிச்சா கோஷ் 4 ரன்னிலும் கிரன் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து தீப்தி சர்மா -ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். கடைசி ஓவரில் தீப்தி சர்மா (10) ஆட்டமிழந்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் எடுத்திருந்தார்.

    இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் ருமானா அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    Next Story
    ×