search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கோலி, பாண்ட்யா அரைசதம்- இங்கிலாந்துக்கு 169 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
    X

    கோலி, பாண்ட்யா அரைசதம்- இங்கிலாந்துக்கு 169 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    • தடுமாற்றத்துடன் ஆடிய ரோகித் சர்மா 28 பந்துகளில் 27 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
    • அதிரடியாக விளையாடிய விராட் கோலி இந்த போட்டியிலும் அரை சதம் அடித்து அசத்தினார்.

    டி20 உலக கோப்பையின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய இந்திய அணி தொடக்கமே சொதப்பலாக இருந்தது. முதல் பந்தில் கேஎல் ராகுல் பவுண்டரி அடித்தாலும் 5 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து விராட் கோலி- ரோகித் சர்மா ஜோடி நிதானமாக ஆடினர். பவுர் பிளேயில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.

    தடுமாற்றத்துடன் ஆடிய ரோகித் சர்மா 28 பந்துகளில் 27 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய சூர்ய குமார் யாதவ் 14 ரன்னில் வெளியேறினார். அடுத்ததாக விராட் கோலி - பாண்ட்யா ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    சிறப்பாக விளையாடிய விராட் கோலி அரை சதம் அடித்து அவுட் ஆனார். தொடர்ந்து அதிரடி காட்டிய பாண்ட்யா 29 பந்தில் அரை சதம் அடித்தார்.இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவரில் 68 ரன்களை இந்திய அணி குவித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×