search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஓய்வு முடிவை அறிவித்த இங்கிலாந்து வீரர்
    X

    ஓய்வு முடிவை அறிவித்த இங்கிலாந்து வீரர்

    • இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பை தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
    • இங்கிலாந்து 6 போட்டிகளில் விளையாடி 1-ல் வெற்றியும் 5 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 31 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் உள்ளன. கடைசி இடத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி உள்ளது.

    இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பை தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி 6 போட்டிகளில் விளையாடி 1-ல் வெற்றியும் 5 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது. வங்காளதேசம் அணியிடம் மட்டுமே இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லி ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். 33 வயதான இவர் இங்கிலாந்து அணிக்காக 70 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 94 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 43 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 51 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    Next Story
    ×