என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஐபிஎல் இறுதிப்போட்டியை காண அகமதாபாத் ரெயில் நிலையத்தில் உறங்கிய சிஎஸ்கே ரசிகர்கள்
    X

    ஐபிஎல் இறுதிப்போட்டியை காண அகமதாபாத் ரெயில் நிலையத்தில் உறங்கிய சிஎஸ்கே ரசிகர்கள்

    • டோனியை காண்பதற்காகவே இவ்வளவு தூரம் பயணித்து வந்ததாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.
    • நேற்றைய போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டது.

    நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற இருந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருந்தன. கனமழை தொடர்ந்து பெய்து வந்ததால் போட்டி ஒத்திவைக்கப்பட்டு இன்று நடைபெறம் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இறுதிப்போட்டியை காண வெளி மாநிலங்களில் இருந்து அகமதாபத்துக்கு வந்த ரசிகர்களுக்கு மழையால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. நேற்றைய போட்டிக்கான டிக்கெட்டுகள் நாளை (இன்று) செல்லுபடியாகும். டிக்கெட்டுகளை பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது.

    அதனால் இறுதிப்போட்டியை பார்த்து விட்டுதான் ஊருக்கு செல்வதாக முடிவெடுத்த ரசிகர்கள், நள்ளிரவில் அகமதாபாத் ரெயில் நிலையத்தில் உறங்கினர். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    டோனியை காண்பதற்காகவே இவ்வளவு தூரம் பயணித்து வந்ததாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.

    Next Story
    ×