search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    முதல் டெஸ்ட்: இலங்கை பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேசம் 188 ரன்னில் சுருண்டது
    X

    முதல் டெஸ்ட்: இலங்கை பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேசம் 188 ரன்னில் சுருண்டது

    • விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், கசுன் ரஜிதா, லஹிரு குமாரா ஆகியோர் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    • தைஜுல் இஸ்லாம் அதிகபட்சமாக 47 ரன்கள் அடித்தார்.

    வங்காளதேசம்- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சியால்ஹெட்டில் நேற்று தொடங்கியது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 280 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அந்த அணியின் தனஞ்ஜெயா டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தலா 102 ரன்கள் அடித்தனர்.

    பின்னர் வங்காளதேசம் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் வங்காளதேசம் 3 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்திருந்தது. மெஹ்முதுல் ஹசன் ஜாய் 9 ரன்னுடனும், தைஜுல் இஸ்லாம் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 180 ரன்னில் சுருண்டது. தைஜுல் இஸ்லாம் அதிகபட்சமாக 47 ரன்கள் அடித்தார். இலங்கை அணி சார்பில் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், கசுன் ரஜிதா, லஹிரு குமாரா ஆகியோர் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    92 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது. அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    Next Story
    ×