search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆசிய கோப்பையில் கடைசி ஆட்டம்- இந்தியா முதலில் பேட்டிங்
    X

    டாஸ் சுண்டப்படும் காட்சி

    ஆசிய கோப்பையில் கடைசி ஆட்டம்- இந்தியா முதலில் பேட்டிங்

    • உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஆவேஷ் கான் இன்னும் பூரணமாக குணமடையவில்லை.
    • இந்திய அணி ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்பில் இன்று ஆக்ரோஷமாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 சுற்றில் இந்திய அணி அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்து பைனல் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார். இந்திய அணியில் ஆவேஷ் கானுக்குப் பதில் தீபக் சாகர் சேர்க்கப்பட்டுள்ளார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ஆவேஷ் கான் இன்னும் பூரணமாக குணமடையவில்லை. அதனால் அவரை ஓய்வு எடுக்கும்படி பிசிசிஐ மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.

    இந்திய அணி ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்பில் இன்று ஆப்கானிஸ்தான் அணியுடன் ஆக்ரோஷமாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் கூறுகையில், 'நாங்கள் முதலில் பேட்டிங் செய்து, மீண்டும் எங்களுக்கான சவால் இலக்கை நிர்ணயிக்க விரும்புகிறோம். ரோஹித் இங்குள்ள கடினமான சூழ்நிலைகள் மற்றும் உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு ஓய்வு எடுக்க விரும்புகிறார். உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான தயாரிப்புகளை ஒவ்வொருவரும் இறுதி செய்ய முயற்சிக்கிறோம். நாங்கள் வலுவான அணியாக வளர்வோம்' என்றார்.

    Next Story
    ×