search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    2வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவுக்கு 247 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து
    X

    மொயீன் அலி 

    2வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவுக்கு 247 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    • இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக மொயீன் அலி 47 ரன்கள் சேர்த்தார்.
    • இந்தியா தரப்பில் யுஸ்வேந்திர சாகல் 10 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    லாட்ஸ்:

    இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, 49 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மொயீன் அலி 47 ரன்கள் சேர்த்தார். டேவிட் வில்லே 41 ரன்கள், ஜேனி பேர்ஸ்டோ 38 ரன்கள், லியாம் லிவிங்ஸ்டோன் 33 ரன்கள், ஜேசன் ராய் 23 ரன்கள் எடுத்தனர்.

    இந்தியா தரப்பில் யுஸ்வேந்திர சாகல் 10 ஓவர்கள் வீசி 47 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். பும்ரா, ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    Next Story
    ×