search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பிப்ரவரி 7-ந்தேதி டி.என்.பி.எல். ஏலம்- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் 11 வீரர்கள் தக்க வைப்பு
    X

    பிப்ரவரி 7-ந்தேதி டி.என்.பி.எல். ஏலம்- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் 11 வீரர்கள் தக்க வைப்பு

    • டி.என்.பி.எல். கோப்பையை 4 முறை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 11 வீரர்களை தக்க வைத்துள்ளது.
    • ஜனவரி 1-ந்தேதி முதல் 20-ந்தேதிக்குள் வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு பிரிமீயர் 'லீக்' என்று அழைக்கப்படும் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் இதுவரை 7 சீசன்கள் முடிந்து விட்டது.

    அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் டி.என்.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 7-ந்தேதி நடக்கிறது. ஏலம் நடை பெறும் இடமும், நேரமும் பின்னர் அறிவிக்கப்படும்.

    டி.என்.பி.எல். போட்டியில் விளையாடும் 8 அணிகளும் தக்க வைத்துக் கொண்ட வீரர்களையும், விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரத்தையும் அறிவித்து உள்ளன.

    8 அணிகளும் மொத்தம் 98 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

    டி.என்.பி.எல். கோப்பையை 4 முறை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 11 வீரர்களை தக்க வைத்துள்ளது. பி.அபராஜித், என்.ஜெகதீசன், அருணாச் சலம், அய்யப்பன், ஜிதேந்தர் குமார், லோகேஷ் ராஜ், மதன்குமார், பிரதோஷ் ரஞ்சன் பவுல், ரஹீல்ஷா, சிபி, சிலம்பரசன் ஆகி யோரை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதற்காக ரூ.28.70 லட்சம் செலவழித்து உள்ளது.

    ஹரீஸ்குமார், ராக்கி, ரோகித், சஞ்சய் யாதவ், சசிதேவ், சந்தோஷ் ஷிவ், விஜி அருள் ஆகிய 8 வீரர்களை விடுவித்துள்ளது.

    ஒவ்வொரு அணியும் 20 வீரர்களை தேர்வு செய்யலாம். இதற்காக ரூ.70 லட்சம் செலவழிக்கலாம். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கைவசம் ரூ.41.30 லட்சம் இருக்கிறது. அந்த அணி ஏலத்தில் 9 வீரர்களை தேர்வு செய்யலாம்.

    நடப்பு சாம்பியனான கோவை கிங்ஸ் அதிகபட்சமாக 17 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கிரண் ஆகாஷ் என்ற வீரரை மட்டும் விடுவித்துள்ளது. அந்த அணி மொத்தம் ரூ.63.15 லட்சம் செலவழித்து உள்ளது. கைவசம் ரூ.6.85 லட்சம் மட்டுமே இருக்கிறது.

    நெல்லை ராயல் கிங்ஸ் 14 வீரர்களையும், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் தலா 13 பேரையும், பால்சி திருச்சி 11 வீரர்களையும், திருப்பூர் தமிழன்ஸ் 10 பேரையும் சேலம் ஸ்பார்ட்ன்ஸ் 9 வீரர்களையும் தக்க வைத்து கொண்டு உள்ளன.

    8 அணிகளிலும் மொத்தம் 62 இடத்துக்கான வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். சேலம் அணியில் தான் அதிகபட்சமாக 11 வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும். அந்த அணியின் தான் அதிகபட்சமாக ரூ.46.70 லட்சம் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக திருப்பூர் அணியிடம் ரூ.45.90 லட்சம் உள்ளது. அந்த அணி 10 வீரர்களை தேர்வு செய்யலாம்.

    சாய்கிஷோர் (திருப்பூர் தமிழன்ஸ்), டி.நடராஜன் (திருச்சி), சந்தீப் வாரியர் (நெல்லை ராயல் கிங்ஸ்) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    விடுவிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் டி.என்.பி.எல். போட்டியில் விளையாட தகுதி பெற்றவர்கள் டி.என்.பி.எல். ஏலத்துக்காக tnpl.cricket/home என்ற இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ளலாம்.

    ஜனவரி 1-ந்தேதி முதல் 20-ந்தேதிக்குள் வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×