என் மலர்tooltip icon

    சினிமா

    எஸ்பிபி சரண் - எஸ் பி பாலசுப்பிரமணியம்
    X
    எஸ்பிபி சரண் - எஸ் பி பாலசுப்பிரமணியம்

    எஸ்.பி.பி-க்கு பிசியோதெரபி சிகிச்சை - எஸ்.பி.பி. சரண்

    கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ் பி பி க்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அவரது மகன் கூறியிருக்கிறார்.
    பிரபல பாடகர் எஸ்.பி.பி. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை மூலமாகவும், அவரது மகனுமான எஸ்.பி.பி. சரண் வீடியோ மூலமாகவும் வெளியிட்டு வருகிறார்கள். 

     நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில், அப்பாவின் நுரையிரலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாடலுக்கு கால் அசைத்தார். எழுதவும் பாடவும் முயற்சி செய்தார் என்று கூறினார்.

    எஸ் பி பாலசுப்ரமணியம்

     இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தற்போது பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஸ்பிபி விரைவில் குணமடைவார் என்று கூறியுள்ளார்.  
    Next Story
    ×