என் மலர்tooltip icon

    சினிமா

    ராம்சந்த், அன்ஷிதா
    X
    ராம்சந்த், அன்ஷிதா

    திருமாயி

    சாலமன் கண்ணன் இயக்கத்தில் ராம்சந்த், அன்ஷிதா நடிப்பில் உருவாகி வரும் ’திருமாயி’ படத்தின் முன்னோட்டம்.
    சாக்‌ஷினி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சாலமன் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் படம் திருமாயி. கதையின் நாயகனாக ராம்சந்த் அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக அன்ஷிதா நடித்துள்ளார். கொடூர வில்லனாக கே.எஸ். மாசாணமுத்து அறிமுகமாகிறார் மேலும் இதில் ராணி, பரவை சுந்தராம்பாள் , நம்பியார் ராஜா, மொட்டைவிஜி, குதிரை முருகன், முரளி கோவிந்த்ராக், முத்துக்காளை, நெல்லை சிவா, கார்த்தி, வீரமணி, பெங்களூர் அலிஷா ஆகியோரும் நடித்துள்ளனர். 

    அன்ஷிதா

    படம் குறித்து இயக்குனர் கூறுகையில், “மலையடிவாரத்திலிருந்து மலைமேல் வாழும் மக்களுக்கான பொருட்களை கழுதை மேல் ஏற்றிக் கொண்டு பாட்டுப் பாடியபடி கொண்டு போய் கொடுத்து வரும் கூட்டத்தை சேர்ந்தவர்கள் தான் இந்தப் படத்தின் நாயகன் நாயகி. தமிழ் சினிமாவில் இதுவரை வந்திராத அளவிற்கு முற்றிலும் மாறுபட்டு முழுவதும் வேறு பட்டு சொல்லப்பட்டுள்ள காதல் கதை இது. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படமிது. இதன் படப்பிடிப்பு தேனி, அல்லிநகரம், கும்பக்கரை, பூதிபுரம், காமக் காபட்டி, சின்னமனூர் வருசநாடு' வடுகபட்டி, கொடைக்கானல், சீலையம்பட்டி, இடங்களில் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
    Next Story
    ×