என் மலர்tooltip icon

    சினிமா

    எண்ணம் புது வண்ணம்
    X

    எண்ணம் புது வண்ணம்

    எந்த உயிருக்கும் முதல் தேவை அன்பு. அதை தாய்பால் மூலமாக நமக்கு ஊட்டுவது தாய். தாயின் அன்பை பெறமுடியாத எந்த மனிதனும் முழுமையான மன வளர்ச்சியுடன் வளர்வதில்லை. அவர்களை அடையாளம் கண்டு நல் போதனை செய்ய தவறினால் நமக்கு வேதனைதான் மிஞ்சும் என்பதை சொல்லும் படம் “எண்ணம் புது வண்ணம்”.
    எந்த உயிருக்கும் முதல் தேவை அன்பு. அதை தாய்பால் மூலமாக நமக்கு ஊட்டுவது தாய். தாயின் அன்பை பெறமுடியாத எந்த மனிதனும் முழுமையான மன வளர்ச்சியுடன் வளர்வதில்லை. அவர்களை அடையாளம் கண்டு நல் போதனை செய்ய தவறினால் நமக்கு வேதனைதான் மிஞ்சும் என்பதை சொல்லும் படம் “எண்ணம் புது வண்ணம்”.

    இந்த படத்தில் நடிகர்கள் விவேக் ராஜ், திவ்யா நாகேஷ், ஆம்பூர் ஜெ.நேதாஜி, நிழல்கள் ரவி, தேவன், ‘நான் கடவுள்’ பாரதி, கிரேன் மனோகர், வாணியம்பாடி. எம்.பழனி, மீசை ராஜேந்திரன், யுவராஜ், அருண் கணேஷ், அருண் சவுந்தர், சத்திய சாய், சத்தியவாசன், சரவணபாபு, வேலுமணி ஆகியோர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு- சேகர் வி.ஜோசப், பின்னணி இசை- சங்கர் கணேஷ், இசை- சவுந்தர்யன், படத்தொகுப்பு- சுரேஷ் ஆர்ஸ், நடனம் - எஸ்.எல்.பாலாஜி, சண்டைப்பயிற்சி -எம்.கே.லீன்

    தயாரிப்பு: ஆம்பூர் ஜெ,நேதாஜி, எம்.ஜி.வேலுமணி, சி.கணேஷ், ஜி.எஸ்.சரவணபாபு, சி.சவுந்தர ராஜன், ஜெ.லோகநாதன், வாணியம்பாடி எம்.பழனி.

    சென்னை, திருப்போரூர், ஏற்காடு, பொள்ளாச்சி, கோபிசெட்டி பாளையம், ஆந்திர மலைக்குப்பம், ஏலகிரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், தலை பாலாறு, கனக நாச்சியம்மன் கோயில், ஒடுக்கத்தூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடை பெறுகிறது.
    Next Story
    ×