என் மலர்
சினிமா

இறைவி
ஸ்டூடியோ கிரீன், அபிஅண்ட்அபி, திருக்குமரன் என்டர் டெயின் மென்ட் இணைந்து தயாரிக்கும் படம் ‘இறைவி’. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கிறார்கள்.
ஸ்டூடியோ கிரீன், அபிஅண்ட்அபி, திருக்குமரன் என்டர் டெயின் மென்ட் இணைந்து தயாரிக்கும் படம் ‘இறைவி’. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் அஞ்சலி, கமாலினி முகர்ஜி, பூஜாதேவ்ரியா, கருணாகரன், சின்னுமோகன், ராதாரவி, வடிவுக்கரசி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இசை-சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு-சிவகுமார் விஜயன், படத்தொகுப்பு-விவேக்ஹர்சன், ஸ்டண்ட்-ஹரிதினேஷ், தயாரிப்பு-கே.ஈ.ஞானவேல் ராஜா, அபினேஷ் இளங்கோவன், சி.வி.குமார். இயக்கம்-கார்த்திக் சுப்புராஜ்.
படம் பற்றி கூறிய விஜய் சேதுபதி, ‘எத்தனையோ படங்களில் நான் நடித்திருந்தாலும் இது வித்தியாசமான படம்’ என்றார்.
பாபிசிம்ஹா தனது பாத்திரம் சிறப்பாக அமைந்திருக்கிறது என்று மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா இது தனது நடிப்புக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் படம் என்று சொல்லி இருக்கிறார். ‘அஞ்சலி, இதுவரை தான் நடித்த படங்களில் இது மறக்க முடியாதது என்று கூறினார்’.
‘அம்மா, அக்காள், தங்கை, காதலி, மனைவி என்ற பெண் சொந்தங்களின் மறுபக்கத்தை சொல்லும் ‘இறைவி’ விரைவில் திரைக்கு வருகிறது’ என்று படகுழுவினர் தெரிவித்தனர். இதை கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இசை-சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு-சிவகுமார் விஜயன், படத்தொகுப்பு-விவேக்ஹர்சன், ஸ்டண்ட்-ஹரிதினேஷ், தயாரிப்பு-கே.ஈ.ஞானவேல் ராஜா, அபினேஷ் இளங்கோவன், சி.வி.குமார். இயக்கம்-கார்த்திக் சுப்புராஜ்.
படம் பற்றி கூறிய விஜய் சேதுபதி, ‘எத்தனையோ படங்களில் நான் நடித்திருந்தாலும் இது வித்தியாசமான படம்’ என்றார்.
பாபிசிம்ஹா தனது பாத்திரம் சிறப்பாக அமைந்திருக்கிறது என்று மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா இது தனது நடிப்புக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் படம் என்று சொல்லி இருக்கிறார். ‘அஞ்சலி, இதுவரை தான் நடித்த படங்களில் இது மறக்க முடியாதது என்று கூறினார்’.
‘அம்மா, அக்காள், தங்கை, காதலி, மனைவி என்ற பெண் சொந்தங்களின் மறுபக்கத்தை சொல்லும் ‘இறைவி’ விரைவில் திரைக்கு வருகிறது’ என்று படகுழுவினர் தெரிவித்தனர். இதை கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
Next Story






