என் மலர்
சினிமா

கிசுகிசு
படமே வரல... அதுக்குள்ள பந்தாவா...
இளம் நடிகை ஒருவர் தற்போது சின்னத்திரையில் இருந்து பெரியத்திரைக்கு வந்திருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் ஒரு படம் ஹிட்டாகி விட்டால், அந்த படத்தில் நடித்த நடிகைகள் சிலர், தான் பெரிய நடிகையாகி விட்டோம் என்று பந்தா காட்டுவார்களாம். ஆனால், தற்போது பாடகியாக இருந்து நடிக்க வந்திருக்கும் நடிகை ஒருவர் ஓவர் பந்தா காண்பித்து வருகிறாராம்.
நடிகை தற்போதுதான் ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறாராம். அதற்குள் மேனேஜர், உதவியாளர் என்று பலரை வேலைக்கு சேர்த்து இருக்கிறார்களாம். நடிகையை யார் அழைத்தாலும் அவரது உதவியாளர்களை வைத்தே பேச வைக்கிறாராம். இதையறிந்த பலரும், இன்னும் படமே வெளியே வரல... அதுக்குள்ள இவ்வளவு பந்தாவா என்று புலம்பி வருகிறார்களாம்.
Next Story