search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    கோடியில் சம்பளம் கேட்டு வாக்குவாதம் செய்த நடிகை

    தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் கோடியில் சம்பளம் கேட்டு வாக்குவாதம் செய்திருக்கிறாராம்.
    தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக பிரபலமான நடிகை, ஐதராபாத்தில் சொந்த வீடு வாங்கி, அங்கேயே வசித்து வருகிறாராம். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழி படங்களில் அவர் நடித்து இருக்கிறாராம். அதனால் நடிகை ஒரு பெரிய தொகையை சம்பளமாக வாங்கி வருகிறாராம்

    அவரை ஒரு புதிய தமிழ் படத்தில் நடிக்க வைப்பதற்காக பேச்சுவார்த்தை நடந்ததாம். 60 நாட்கள் கால்ஷீட்டுக்கு ரூ.3 கோடி சம்பளம் வேண்டும் என்று அவர் கேட்டாராம். அந்த சம்பளத்தை கொடுக்க டைரக்டர் தயங்கினாராம். 

     அதற்கு நடிகை என்னுடைய படங்கள் அனைத்து மொழிகளிலும் ‘டப்’ செய்யப்படுகிறது. அதனால் எனக்கு ரூ.3 கோடி சம்பளத்தை தாராளமாக கொடுக்கலாம்” என்று கூறினாராம்.

     இது வாக்குவாதமாக மாறியதாம். இதில் நடிகை வெற்றி பெற்று விட்டாராம். நீண்ட வாக்கு வாதத்திற்கு பிறகு நடிகை கேட்ட சம்பளத்தை இயக்குனர் கொடுக்க முன்வந்து இருக்கிறாராம்.
    Next Story
    ×