என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கவர்ச்சியாக நடிக்க யோசிக்கும் சூப்பர்ஸ்டார் நடிகை
Byமாலை மலர்10 July 2017 12:48 PM GMT (Updated: 10 July 2017 12:48 PM GMT)
மீண்டும் கவர்ச்சியாக நடிக்கலாமா? என்று சூப்பர்ஸ்டார் நடிகை ஆழ்ந்த யோசனையில் இருந்து வருகிறாராம்.
தமிழ் திரையுலகின் முன்னணி நாயகியாக வலம் வருபவர் சூப்பர்ஸ்டார் நடிகை. அவர் தேர்வு செய்து நடித்து வரும் அனைத்து படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கேற்றாற் போல், அவரும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
தமிழ் சினிமா மட்டுமல்லாமல், தெலுங்கு திரையுலகிலும் நடிகைக்கு அவ்வப்போது வாய்ப்பு வருகிறது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் நடிகை, தற்போது தெலுங்கின் முன்னணி நாயகர் ஒருவருடன் வரலாற்று கதை ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அந்த நாயகருடன் இரு படங்களில் நடிகை நடித்திருக்கும் போது, மூன்றாவதாக ஒரு வாய்ப்பு கிடைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த படத்தில் நடிகை கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் விரும்புகிறாராம். தெலுங்கு திரையுலகத்தை பொறுத்த வரையில், தெலுங்கு ரசிகர்களுக்காக நடிகைகளின் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பது நாம் அறிந்ததே.
நடிகை தொடக்கத்தில் கவர்ச்சி வேடங்களில் நடித்திருந்தாலும், தற்போது நடித்து வரும் படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளதால், மீண்டும் கவர்ச்சியாக நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்று யோசிக்கிராராம். எனவே அந்த படத்தில் நடிக்கலாமா? வேண்டாமா? என்று நடிகை தீவிரமாக யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா மட்டுமல்லாமல், தெலுங்கு திரையுலகிலும் நடிகைக்கு அவ்வப்போது வாய்ப்பு வருகிறது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் நடிகை, தற்போது தெலுங்கின் முன்னணி நாயகர் ஒருவருடன் வரலாற்று கதை ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அந்த நாயகருடன் இரு படங்களில் நடிகை நடித்திருக்கும் போது, மூன்றாவதாக ஒரு வாய்ப்பு கிடைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த படத்தில் நடிகை கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் விரும்புகிறாராம். தெலுங்கு திரையுலகத்தை பொறுத்த வரையில், தெலுங்கு ரசிகர்களுக்காக நடிகைகளின் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பது நாம் அறிந்ததே.
நடிகை தொடக்கத்தில் கவர்ச்சி வேடங்களில் நடித்திருந்தாலும், தற்போது நடித்து வரும் படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளதால், மீண்டும் கவர்ச்சியாக நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்று யோசிக்கிராராம். எனவே அந்த படத்தில் நடிக்கலாமா? வேண்டாமா? என்று நடிகை தீவிரமாக யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X