search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார்  டி.ராஜேந்தர்
    X

    டி.ராஜேந்தர்  சிம்பு

    அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் டி.ராஜேந்தர்

    • உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
    • மேல் சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் அமெரிக்கா சென்றிருந்தார்.

    உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மே மாதம் 19-ந் தேதி இயக்குநர் டி.ராஜேந்தர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், இதயத்துக்கு செல்லக் கூடிய ரத்த குழாயில் அடைப்பு இருப்பதைக் கண்டறிந்தனர்.

    இதற்கான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், வயிற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள ரத்தக் கசிவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை பெற டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் அமெரிக்கா சென்றார். இதையடுத்து அங்கு அவருக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    சிகிச்சைக்குப் பிறகு டி.ராஜேந்தர் குடும்பத்தாருடன் அமெரிக்காவில் ஓய்வில் இருந்து வந்தார். இந்த நிலையில் டி.ராஜேந்தர் இன்று அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார்.

    விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தம் மீது அன்பு காட்டிய தமிழக மக்கள் பிரார்த்தனையின் பலன் காரணமாக தாம் நலமுடன் உள்ளதாக கூறினார்.தமது உடல் நலம் குறித்து விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    Next Story
    ×