search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பா.இரஞ்சித்தை நேரில் சந்தித்த விக்ரம்- ஏன் தெரியுமா?
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பா.இரஞ்சித்தை நேரில் சந்தித்த விக்ரம்- ஏன் தெரியுமா?

    • பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'தங்கலான்'.
    • இப்படம் ஜனவரி 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.


    இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்ததையடுத்து இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'தங்கலான்' திரைப்படம் ஜனவரி 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதையடுத்து இயக்குனர் பா.இரஞ்சித் நேற்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரைப்பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தின் மூலமாக தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித்தை நேரில் சந்தித்து நடிகர் விக்ரம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை 'தங்கலான்' படக்குழு இணையத்தில் பகிர்ந்துள்ளது.


    Next Story
    ×