search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
    X

    விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

    • உலக மகன் என்ற தனது கதையை திருடி உப்பெனா என்று உருவாக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.
    • விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

    தெலுங்கு நடிகர் வைஷ்னவ் தேவ், கிர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் உருவான படம் உப்பெனா. இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். தெலுங்கு மொழியில் வெளியான இப்படத்தை தமிழில் மறு உருவாக்கம் செய்ய அந்த படத்தில் வில்லனாக நடித்து நடிகர் விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் வாங்கியதாக தகவல் வெளியானது.

    உப்பெனா

    இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய விஜய் சேதுபதிக்கு தடை விதிக்கக் கோரி தேனியை சேர்ந்த டல்ஹவுசி பிரபு என்ற உதவி இயக்குனர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். உலக மகன் என்ற தனது கதையை திருடி உப்பெனா என்று உருவாக்கப்பட்டதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    உப்பெனா - விஜய் சேதுபதி

    இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதியிடம், உப்பெனா படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கவில்லை என்று நடிகர் விஜய் சேதுபதி தரப்பு விளக்கம் அளித்தது. விஜய் சேதுபதியின் விளக்கத்தை ஏற்று கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

    Next Story
    ×