என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
செந்தீயைத் தீண்டாதே தள்ளிநில் இந்தியே.. வைரலாகும் கவிஞர் வைரமுத்து பதிவு..
- மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
- கவிஞர் வைரமுத்துவின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, சிவகங்கை ராஜேந்திரன், மயிலாடுதுறை சாரங்கபாணி என பலர் இந்தி திணிப்பை எதிர்த்தும் தமிழ் மொழியைக்காக்கவும் தங்களது இன்னுயிரை நீத்துள்ளனர்.
வைரமுத்து
இந்தநிலையில் அவர்களின் நினைவு போற்றும் விதமாக மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மொழிப்போர் வீரர்களை நெற்றி நிலம்பட வணங்குகிறோம்.
கண்ணகி மதுரையில் இட்ட நெருப்புக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சுட்டது தமிழுக்காக எங்கள் மறவர்கள் தேகத்தில் மூட்டிக்கொண்ட தீ தான். தேகங்கள் அணைந்துவிட்டன தீ அப்படியே. செந்தீயைத் தீண்டாதே தள்ளிநில் இந்தியே" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
மொழிப்போர் வீரர்களை
— வைரமுத்து (@Vairamuthu) January 25, 2023
நெற்றி நிலம்பட
வணங்குகிறோம்
கண்ணகி
மதுரையில் இட்ட
நெருப்புக்குப் பிறகு
தமிழ்நாட்டைச் சுட்டது
தமிழுக்காக
எங்கள் மறவர்கள்
தேகத்தில்
மூட்டிக்கொண்ட தீ தான்
தேகங்கள்
அணைந்துவிட்டன
தீ அப்படியே
செந்தீயைத் தீண்டாதே
தள்ளிநில் இந்தியே#தமிழ் | #தமிழ்நாடு
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்