search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபல பாடகருக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகர்.. இசை நிகழ்ச்சியில் பரபரப்பு
    X

     ஈஸ்வர் ரகுநாதன்

    பிரபல பாடகருக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகர்.. இசை நிகழ்ச்சியில் பரபரப்பு

    • நடிகர் ஈஸ்வர் ரகுநாதன் டி.வி. நடிகர் ஆவார்.
    • இவர் தற்போது பல தொடர்களில் நடித்து வருகிறார்.

    டி.வி. நடிகர் ஈஸ்வர் ரகுநாதனால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பிரபல பாடகர் கிருஷ்ணா பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில் கூறி யிருப்பதாவது:- நேற்று முன்தினம் நான் இசை நிகழ்ச்சிக்காக தனியார் ஓட்டலுக்கு சென்றிருந்தேன். அங்கு சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் ரகுநாதன், சக நடிகர்களுடன் இருந்தார். என்னை பார்த்ததும் என்னிடம் வந்து உட னடியாக அங்கிருந்து கிளம்பிவிடுமாறு மிரட்ட தொடங்கினார்.

    காரணம் கேட்ட போது ஏதும் கூறாமல் உன்னை கொல்வதற்கு 10 பேரை தயார் செய்துள்ளேன். மேலும் தன் அருகில் அமர்ந்திருந்த நண்பர்களை காட்டி இங்கிருந்து நீ கிளம்பாவிட்டால் இவர்கள் உன்னை உடனே அடித்து கொன்றுவிடுவார்கள் என்று மிரட்டினார். மேலும் உன் நாட்களை எண்ணிக் கொள் என்று மிரட்டியதுடன் நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.


    பாடகர் கிருஷ்ணா

    எனக்கும் அவருக்கும் எந்தவித முன்விரோதமும் இல்லை. அவருடன் பேசியே பல ஆண்டுகள் ஆகிவிட்டது. உயிர் பயம் கொடுக்கும் அளவிற்கு என்னை மிரட்டியதற்கான காரணமும் தெரியவில்லை. ஆதலால் தாங்கள் தயவு செய்து அவரை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

    நான் கூறியது அனைத்தும் அங்குள்ள கேமராவில் பதிவாகி இருக்கும். மேலும் என் முதிர்ந்த தாயாருடன் தனியாக வசித்து வருவதால், ஈஸ்வரிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×