search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    படத்தில் நடனம் இல்லை என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது - சசிகுமார் கலாய் பேச்சு
    X

    சசிகுமார்

    படத்தில் நடனம் இல்லை என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது - சசிகுமார் கலாய் பேச்சு

    • இயக்குனர் சத்ய சிவா இயக்கத்தில் சசிகுமார் தற்போது நான் மிருகமாய் மாற என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

    சுப்ரமணியபுரம், நாடோடிகள், குட்டி புலி, தாரை தப்பட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்த சசிகுமார் தற்போது நான் மிருகமாய் மாற என்ற படத்தில் நடித்துள்ளார். இதனை கழுகு படத்தை இயக்கிய சத்ய சிவா இயக்கியுள்ளார். செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்திருக்கும் இப்படம் வருகிற நவம்பர் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    சசிகுமார்

    இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் சசிகுமார், சத்யசிவா, ஜிப்ரான் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். அதில் சசிகுமார் பேசியதாவது, நான் படம் நடித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. காமன் மேன் என்று இந்த திரைப்படத்திற்கு முதலில் பெயர் வைக்கப்பட்டது. பின்னர் அந்த தலைப்பு மாற்றப்பட்டு நான் மிருகமாய் மாற என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தப் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கும். எனினும் குழந்தை, மனைவி என்று கதையில் ஒரு சராசரி மனிதனின் உணர்ச்சிகள் சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கும். ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் அளித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

    நான் மிருகமாய் மாற

    பாடலே இல்லாத திரைப்படத்தில் முதன்முறையாக பணியாற்றியுள்ளேன். படத்தில் நடனம் இல்லை என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எப்பொழுதும் ஒரு கிராமத்து கதாநாயகனாக வயலில் வேட்டியுடன் சுற்றித்திரிந்த எனக்கு ஒலிப் பொறியாளர் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. இந்த கதாபாத்திரத்திற்காக ஒலிப்பொறியாளர்கள் லட்சுமி நாராயணன் மற்றும் உதயகுமார் அவர்களை கூர்ந்து கவனித்தேன். படத்தில் அனைத்துமே புதியதாக இருக்கும். இதற்காக அனைவரும் கடினமாக உழைத்து உள்ளோம். படக்குழுவினர் அனைவரும் தங்களது முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பாக பங்களித்து பணியாற்றியுள்ளனர். "படம் இப்படி இருக்கு, அப்படி இருக்கு என்று சொல்லல, நீங்க பார்த்துட்டு சொல்லுங்க, படம் எப்படி இருக்குன்னு" என்றார்.

    Next Story
    ×