search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகை ஷோபனா வீட்டில் திருட்டு.. குற்றவாளியை காப்பாற்றியது இவரா!
    X

    ஷோபனா

    நடிகை ஷோபனா வீட்டில் திருட்டு.. குற்றவாளியை காப்பாற்றியது இவரா!

    • பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் ஷோபனா.
    • பரதநாட்டிய கலைஞரான இவர் நடன பள்ளியும் நடத்தி வருகிறார்.

    பிரபல திரைப்பட நடிகையான ஷோபனா பரதநாட்டிய கலைஞராகவும் உள்ளார். இவர் ரஜினி, கமல், பாக்யராஜ் உள்பட பல திரைப்பிரபலங்களுடன் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

    சென்னை, தேனாம்பேட்டையில் வசித்து வரும் நடிகை ஷோபனாவின் வீட்டில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலை சேர்ந்த விஜயா என்பவர் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார். வீட்டின் முதல் தளத்தில் வசித்து வரும் ஷோபனாவின் தாயை விஜயா உடனிருந்து கவனித்து வந்த நிலையில், தாயார் வைத்திருந்த பணம் அடிக்கடி மாயமானதால் குழம்பி போன ஷோபனா போலீசில் புகாரளித்திருக்கிறார்.

    இந்நிலையில், வீட்டிலிருந்து பணத்தை தான் திருடியதாகவும், சிறுக சிறுக சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை திருடி, அப்பணத்தை ஜிபே மூலம் தனது மகளுக்கு அனுப்பியதாகவும் கூறி பணிப்பெண் விஜயா குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனால், போலீசிடமிருந்து புகாரை வாபஸ் பெற்ற நடிகை ஷோபனா, பணிப்பெண்ணை வேலையில் இருந்து நீக்காமல், திருடிய பணத்தை வீட்டில் வேலை பார்த்தே கழிக்குமாறு கூறி எச்சரித்திருக்கிறார்.

    Next Story
    ×