search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தாதா சாகேப் பால்கே விருது பெறும் காந்தாரா பட நடிகர் ரிஷப் ஷெட்டி
    X

    ரிஷப் ஷெட்டி

    தாதா சாகேப் பால்கே விருது பெறும் 'காந்தாரா' பட நடிகர் ரிஷப் ஷெட்டி

    • சிறிய பட்ஜெட்டில் உருவாகி அனைவரையும் திரும்பி பார்க்க செய்த திரைப்படம் ’காந்தாரா’.
    • இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.

    நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.


    காந்தாரா

    கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை பலரும் பாராட்டினர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.


    ரிஷப் ஷெட்டி

    இந்நிலையில், 'சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர்' என்ற பிரிவில் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு 2023-ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழா வருகிற 20 -ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×