search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பத்து தல லுக்கில் சிம்பு அந்த படத்துல நடிச்சது வருத்தமாக இருந்தது - இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா
    X

    பத்து தல

    'பத்து தல' லுக்கில் சிம்பு அந்த படத்துல நடிச்சது வருத்தமாக இருந்தது - இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா

    • இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’.
    • இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் 'பத்து தல' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.


    பத்து தல

    கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடலான 'நம்ம சத்தம்' பாடல் வெளியாகி கவனம் பெற்றது.


    பத்து தல

    இதையடுத்து இயக்குனர் ஒபலி என்.கிருஷ்ணா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, " வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் கவுதம் மேனன் சிறிய மாற்றம் செய்ததால் 'பத்து தல' லுக்கில் தான் சிம்பு அப்படத்தில் நடிக்க வேண்டி இருந்தது. இது எனக்கு சிறிது வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால்,'வெந்து தணிந்தது காடு' படத்தில் 'பத்துதல' தோற்றத்தை ரசிகர்கள் கவனித்து ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சியே' என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×