search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    படம் பார்த்து அழுத முதல்-மந்திரி.. வைரலாகும் புகைப்படம்
    X

    பசவராஜ் பொம்மை

    படம் பார்த்து அழுத முதல்-மந்திரி.. வைரலாகும் புகைப்படம்

    • இயக்குனர் கிரண்ராஜ் இயக்கத்தில் ஜூன் 10-ந் தேதி வெளியான படம் ‘777 சார்லி’.
    • கர்நாடக முதல் - மந்திரி பசவராஜ் பொம்மை படம் பார்த்துவிட்டு தன் நாயினை நினைத்து அழுத புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

    இயக்குனர் கிரண்ராஜ் இயக்கத்தில் ரக்ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்து ஜூன் 10-ம் தேதி வெளியான படம் '777 சார்லி'. கன்னடத்தில் உருவான இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டது. இப்படத்தின் தமிழ் பதிப்பின் வெளியீட்டு உரிமையை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் மூலம் கைப்பற்றினார்.

    '777 சார்லி' என்ற நாயுடனான அன்பைச் சொல்லும் நகைச்சுவைப் படமாக வெளியான இப்படம் ரசிகர்களிடம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, கர்நாடக முதல் - மந்திரி பசவராஜ் பொம்மை '777 சார்லி' திரைப்படத்தை பார்த்துவிட்டு தான் வளர்த்த நாயினை நினைத்து அழுதுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

    பசவராஜ் பொம்மை


    மேலும், படம் குறித்து அவர் கூறுகையில், ' நாய்களை பற்றிய பல படங்கள் உள்ளன, ஆனால் இந்த திரைப்படம் உணர்சிகள் மற்றும் விலங்குகளின் ஒத்திசைவை காட்டுகிறது. நாய் அதனுடைய கண்கள் வழியாக உணர்சிகளை வெளிப்படுத்துகிறது. இது ஒரு நல்ல திரைப்படம். இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். நாயின் அன்பானது நிபந்தனையற்ற அன்பு அது தூய்மையானது' என்று அவர் கூறியுள்ளார்.

    முதல் - மந்திரி பசவராஜ் பொம்மை ஆசையாக வளர்த்து வந்த நாய் ஒன்று கடந்த ஆண்டு இறந்தபோது அதனை அவர் கட்டிப்பிடித்து கதறி அழுத புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×