search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வேகமெடுக்கும் காந்தாரா -2.. ரிஷப் ஷெட்டி கொடுத்த அப்டேட்
    X

    காந்தாரா

    வேகமெடுக்கும் 'காந்தாரா -2'.. ரிஷப் ஷெட்டி கொடுத்த அப்டேட்

    • கடந்த ஆண்டு வெளியான காந்தாரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.


    ரிஷப் ஷெட்டி பதிவு

    கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை பலரும் பாராட்டினர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து நேற்று யுகாதி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குனர் ரிஷப் ஷெட்டி 'காந்தாரா -2' திரைப்படத்தின் கதை எழுதும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    Next Story
    ×