search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    டிஎன்பிஎல் போட்டியில் தடம் பதித்த கவுதம் மேனன் மகன்
    X

    கவுதம் மேனன்

    டிஎன்பிஎல் போட்டியில் தடம் பதித்த கவுதம் மேனன் மகன்

    • கவுதம் வாசுதேவ் மேனன் தற்போது சிம்பு இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி வருகிறார்.
    • கவுதம் மேனனின் மகன் ஆர்யா யோஹான் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார்.

    மின்னலே படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கவுதம் மேனன். அதன்பின் காக்கா காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். கவுதம் மேனன்-சிம்பு கூட்டணியில் உருவான 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்களை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

    ஆர்யா யோஹான்

    கவுதம் வாசுதேவ் மேனனின் மகன் ஆர்யா யோஹான். 19 வயதாகும் இவர் தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் களம் இறங்கின. டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் அறிமுக வீரராக களமிறங்கிய ஆர்யா யோஹான் தனது அணிக்காக முதல் விக்கெட்டை வீழ்த்தினார். சேலம் ஸ்பார்டன்ஸ் அணியில் விளையாடிய ஜாஃபர் ஜமால் முதல் ஓவரில் 11 ரன்கள் விளாசினார். இரண்டாவது ஓவர் வீசிய ஆர்யா யோஹான் தனது முதல் பந்திலேயே ஜமாலின் விக்கெட்டை வீழ்த்தினார்.

    இப்போட்டியில் மொத்தம் 3 ஓவர்கள் வீசிய ஆர்யா யோஹான் 26 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட் மற்றும் 1 ரன் அவுட் செய்தார். இந்த போட்டியில் நெல்லை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×