search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    காலம் போனதே தெரியவில்லை.. செல்வராகவன் நெகிழ்ச்சி பதிவு..
    X

    செல்வராகவன்

    காலம் போனதே தெரியவில்லை.. செல்வராகவன் நெகிழ்ச்சி பதிவு..

    • இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகன் நடித்துள்ள பகாசூரன் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளது.
    • இதனை தனது சமூக வலைதளத்தில் மோகன் ஜி பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

    பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள்.


    பகாசூரன்

    இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.


    செல்வராகவன் - மோகன்ஜி

    இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ள இயக்குனர் மோகன் ஜி பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "டப்பிங் பணிகள் முடிந்தது.. இந்த மாமனிதருடன் பணிபுரிந்த நாட்கள் மறக்க முடியாத நாட்கள்.. மீண்டும் செல்வா சாருடன் இணைந்து பணிபுரிய ஆசை.. இனிமையான, எளிமையான மாமனிதர் இவர்.. நன்றி செல்வராகவன் சார்" என்று புகைப்படம் ஒன்றை பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக செல்வராகவன், "மகிழ்ச்சியான தருணங்கள் ! காலம் போனதே தெரியவில்லை ! பேரன்புக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.


    Next Story
    ×