search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    டப்பிங் பணிகளை தொடங்கிய கிரிமினல் படக்குழு
    X

    டப்பிங் பணிகளை தொடங்கிய 'கிரிமினல்' படக்குழு

    • நடிகர் கவுதம் கார்த்திக் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘கிரிமினல்’.
    • இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

    அறிமுக இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கும் திரைப்படம் 'கிரிமினல்'. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர். மதுரையைப் பின்னணியாகக் கொண்டு கிரைம் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தை பார்சா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.


    சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 23-ஆம் தேதி மதுரையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததையடுத்து சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர்.


    கிரிமினல் படக்குழு

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கிரிமினல்' படத்தின் டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. இதனை நடிகர் கவுதம் கார்த்திக் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×