search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    என் அன்பை கொச்சைப்படுத்திவிட்டீர்கள்.. கேள்வியால் கலகத்தை ஏற்படுத்திய பிக்பாஸ்..
    X

    என் அன்பை கொச்சைப்படுத்திவிட்டீர்கள்.. கேள்வியால் கலகத்தை ஏற்படுத்திய பிக்பாஸ்..

    • பிக்பாஸ் 6-வது சீசன் தற்போது 32-நாட்களை எட்டியுள்ளது.
    • இதன் புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல் வெளியேறினார். கடந்த வாரம் ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டார். இதில் தற்போது 17 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 32-வது நாட்களை நெருங்கியுள்ளது.


    பிக்பாஸ் சீசன் 6

    இந்நிலையில், இன்று வெளியான முதல் புரோமோவில் இந்த வீட்டில் நல்லவர் என்று முகமூடி அணிந்திருக்கும் நபர் யார் என்று பிக்பாஸ் கேள்வி எழுப்புகிறார். இதற்கு ஏ.டி.கே. என்று ஜனனி பதிலளிக்க இருவருக்குள்ளும் முட்டிக் கொள்கிறது. கோபத்தின் உச்சிக்கு சென்ற ஏ.டி.கே. ஜனனியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். மேலும் நான் ஏன் உன்னை கூப்பிட்டு அறிவுரை கூறுகிறேன் உன்னிடம் ஒரு தனிப்பட்ட அன்பு இருப்பதால் தான்.


    பிக்பாஸ் சீசன் 6

    அந்த அன்பை கொச்சப்படுத்திட்டீங்க. நான் ஒரு தங்கச்சி மாதிரி அந்த அவளை பார்த்தேன். அவள் மீது வைத்த பாசம் போல் இந்த வீட்டில் யாரின் மேலும் நான் வைக்கவில்லை. அதனால் தான் மீண்டும் மீண்டும் சென்று அவளிடன் ஏன் என்னிடம் பேசாமல் இருக்கிறாய் என்று கேட்பேன். இதனுடம் இந்த புரோமோ முடிவடைகிறது. தற்போது இந்த புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    Next Story
    ×