search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் மாயம்.. போலீசார் விசாரணை
    X

    நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் மாயம்.. போலீசார் விசாரணை

    • பிரபல இந்தி நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி.
    • இவர் 'இந்தியன் போலீஸ் போர்ஸ்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.

    பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில், பிரபுதேவாவுடன் 'மிஸ்டர் ரோமியோ' படத்தில் நடித்துள்ளார். விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இவர் தற்போது 'இந்தியன் போலீஸ் போர்ஸ்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.



    இந்தத் தொடரை இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கி வருகிறார். இந்த வெப் தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. நடிகை ஷில்பா ஷெட்டியின் வீடு மும்பை, ஜுஹு பகுதியில் அமைந்துள்ளது. இவரது பிறந்த நாளை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் நடிகை ஷில்பா ஷெட்டி இத்தாலி நாட்டுக்கு சுற்றுலா சென்று உள்ளார்.



    இந்நிலையில், அவரது வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஷில்பா ஷெட்டியின் தரப்பில் ஜுஹு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×