search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    படப்பிடிப்பு தளத்தில் விபரீதம்.. காலை உடைத்து கொண்ட ஷில்பா ஷெட்டி..
    X

    ஷில்பா ஷெட்டி

    படப்பிடிப்பு தளத்தில் விபரீதம்.. காலை உடைத்து கொண்ட ஷில்பா ஷெட்டி..

    • இந்திய திரையுலகின் முன்னணி நடிகை ஷில்பா ஷெட்டி.
    • இவர் 'இந்தியன் போலீஸ் போர்ஸ்' வெப் தொடரில் நடித்து வருகிறார்.

    பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில், பிரபுதேவாவுடன் 'மிஸ்டர் ரோமியோ' படத்தில் நடித்துள்ளார். விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இவர் தற்போது 'இந்தியன் போலீஸ் போர்ஸ்' என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.

    இந்தத் தொடரை இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பின் போது ஷில்பா ஷெட்டி தனது காலை உடைத்துக் கொண்டுள்ளார். உடைந்த காலுடன் கட்டுப்போட்டு வீல் சேரில் ஷில்பா ஷெட்டி இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.


    ஷில்பா ஷெட்டி

    இது தொடர்பாக ஷில்பா ஷெட்டி தனது சமூக வலைதளத்தில், "உண்மையிலேயே காலை உடைத்துக்கொண்டேன். இன்னும் 6 வாரங்களுக்கு தன்னால் படப்பிடிப்புகளில் பங்கேற்க முடியாது. விரைவாக குணமடையப் பிரார்த்தியுங்கள். இன்னும் வலுவான, சிறப்பான முறையில் திரும்ப வருவேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கு முன்பு ஷில்பா ஷெட்டி இந்த வெப் தொடருக்காக சண்டைக் காட்சி ஒன்றில் நடிப்பது போன்ற ஒரு வீடியோவை இணையத்தில் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×