search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நான் பொறுமையாக இருக்க மாட்டேன்.. நடிகை ராதிகா
    X

    ராதிகா

    நான் பொறுமையாக இருக்க மாட்டேன்.. நடிகை ராதிகா

    • ஷெரோ 2022-க்கான விருதுகள் வழங்கும் விழாவில் திரையுலகினர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.
    • இவ்விழாவில் நடிகை ராதிகா இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள் கூறினார்.

    ஷெரோ 2022-க்கான விருதுகள் வழங்கும் விழாவில் சுஹாசினி மணிரத்னம், ராதிகா சரத்குமார், ஷெரோ ஹோம் புட் நிறுவனர் ஜெயஸ்ரீ, திலக் வெங்கடசாமி, சட்டமன்ற உறுப்பினர் எழிலன் ஆகியோர் இணைந்து வீட்டு முறை உணவு தயாரிப்பில் சாதனை படைத்த திருமதி நித்யாவிற்கு குயின் விருதை வழங்கினர்

    .

    ராதிகா

    இந்த விழாவில் வீட்டு முறை உணவு தயாரிப்பில் சாதனை புரிந்த 50க்கும் மேற்பட்ட பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகை ராதிகா பேசியதாகவது, நானும் சுகாசினியும் 42 ஆண்டுகள் தோழிகளாக இருக்கிறோம். சுகாசினி மிகவும் பொறுமைசாலி, ஆனால் தான் பொறுமையாக இருக்க மாட்டேன்.

    ராதிகா

    திறமையான பெண்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் தன்னை அழைத்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களைப் போன்ற பிரபலங்களுக்கு பாராட்டுக்கள் விருதுகள் கிடைப்பது பெரிதல்ல. வீட்டிலேயே உணவு தயாரிக்கும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இந்த விருதுகள் வழங்குவது உண்மையில் பாராட்டுக்குரியது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் பிரபலங்களாக உருவாக முடியாது இருந்தாலும் அனைவரும் இது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ராணியாக இருப்பது மகிழ்ச்சி என்றார்.

    Next Story
    ×