search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட கீர்த்தி சுரேஷ்.. பாதுகாப்பாக மீட்ட தேவஸ்தான ஊழியர்கள்
    X

    கீர்த்தி சுரேஷ்

    ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட கீர்த்தி சுரேஷ்.. பாதுகாப்பாக மீட்ட தேவஸ்தான ஊழியர்கள்

    • நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ‘மாமன்னன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இவர் தமிழில் மேலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'தசரா' திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.


    கீர்த்தி சுரேஷ்

    இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சுவாமி தரிசனத்திற்கு பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவில் பிரகாரத்தை விட்டு வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.


    திருப்பதியில் கீர்த்தி சுரேஷ்

    பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய கீர்த்தி சுரேஷ், மாமன்னன் படத்தைத் தொடர்ந்து தமிழில் இரண்டு படங்கள் நடித்து வருவதாகவும் அது விரைவில் வெளிவரவுள்ளதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து கோவிலை விட்டு வெளியேறிய கீர்த்தி சுரேஷை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். இதனால் கீர்த்தி சுரேஷ் வெளியேற முடியாமல் திணறினார். உடனே தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்கள் கீர்த்தி சுரேஷை மீட்டு பேட்டரி கார் மூலம் அவர் கார் இருக்கும் இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

    Next Story
    ×