search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    என் முதுகுக்கு பின்னால் பேசியவர்களை மறக்க மாட்டேன் - நடிகை பாவனா ஆதங்கம்
    X

    பாவனா

    என் முதுகுக்கு பின்னால் பேசியவர்களை மறக்க மாட்டேன் - நடிகை பாவனா ஆதங்கம்

    • நடிகை பாவனா தற்போது 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்னு' என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் பாவனா. சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்து சினிமாவைவிட்டு ஒதுங்கினார். 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்னு' என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.


    பாவனா

    இந்நிலையில் வலைத்தளங்களில் தனக்கு எதிராக அவதூறு பரவுவதால் கோபம் அடைந்துள்ளார். இதுகுறித்து பாவனா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, ''மலையாள திரையுலகில் மீண்டும் நடிக்க வரமாட்டேன் என்று நினைத்தேன். அப்படி வந்தால் மன அமைதி போய்விடும் என்று நினைத்தேன். ஆனால் என் நண்பர்கள் மீண்டும் நடிக்க வைத்து விட்டார்கள்.


    பாவனா

    இணைய தளங்களில் எனக்கு எதிராக அவதூறுகள் பரவி வருகின்றன. வலைத்தளம் மூலம் மற்றவர்களை மிரட்டுவது, களங்கம் ஏற்படுத்துவது சிலரின் வேலையாகிவிட்டது. பணம் கொடுத்து ஆட்களை பணியமர்த்தியும் இதை செய்ய வைக்கிறார்கள். எனது கதாபாத்திரங்கள் வாயிலாக என்னை அறிந்தவர்களும் இதனை செய்தனர். என் முதுகுக்கு பின்னால் பேசியவர்களை நான் மறக்க மாட்டேன்" என்றார்.

    Next Story
    ×