search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தொடர் படப்பிடிப்பு.. உறியடி விஜய்குமாரின் படம் நிறைவு..
    X

    விஜய்குமார்

    தொடர் படப்பிடிப்பு.. 'உறியடி' விஜய்குமாரின் படம் நிறைவு..

    • 'உறியடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஜய்குமார்.
    • இவர் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

    'உறியடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஜய்குமார். இவர் தற்போது இயக்குனர் தமிழ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகிகளாக ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் ரிச்சா ஜோஷி நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் ரிச்சா ஜோஷி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.


    படக்குழு

    மேலும், இந்த படத்தில் 'வத்திக்குச்சி' திலீபன், 'கைதி' ஜார்ஜ் மரியான், 'வடசென்னை' பாவல் நவகீதன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ரீல் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர்ந்து 62 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை துவங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தகக்து.

    Next Story
    ×