search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அனுமதியின்றி வளர்த்த கிளிகள்.. நடிகர் ரோபோ சங்கருக்கு அபராதம் விதிப்பு..
    X

    ரோபோ சங்கர்

    அனுமதியின்றி வளர்த்த கிளிகள்.. நடிகர் ரோபோ சங்கருக்கு அபராதம் விதிப்பு..

    • நடிகர் தனுஷ் நடித்த 'மாரி' உள்ளிட்ட ஏராளமான படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் ரோபோ சங்கர்.
    • சமீபத்தில் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்து வந்த இரு கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    நடிகர் தனுஷ் நடித்த 'மாரி' உள்ளிட்ட ஏராளமான படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் ரோபோ சங்கர். இவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து மிகவும் பிரலமடைந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நடித்துள்ளார்.


    ரோபோ சங்கர்

    சமீபத்தில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டில், அனுமதியின்றி வளர்த்து வந்த 2 அலெக்சாண்டரியன் பச்சை கிளிகளை கிண்டி வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 2 கிளிகளும் கிண்டியில் உள்ள தேசிய சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், உரிய அனுமதியின்றி வீட்டில் வெளிநாட்டு ரக கிளிகளை வளர்த்ததன் காரணமாக நடிகர் ரோபோ சங்கருக்கு வனத்துறை சார்பில் ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×