search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சூர்யா-விஜய் சேதுபதியுடன் போட்டிபோட வேண்டியுள்ளது.. அதிக சம்பளம் குறித்து பிரகாஷ்ராஜ் விளக்கம்
    X

    பிரகாஷ்ராஜ்

    சூர்யா-விஜய் சேதுபதியுடன் போட்டிபோட வேண்டியுள்ளது.. அதிக சம்பளம் குறித்து பிரகாஷ்ராஜ் விளக்கம்

    • காஞ்சிவரம், இருவர், மேஜர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரகாஷ்ராஜ் தனி கவனம் பெற்றார்.
    • தற்போது முன்னணி நடிகர்களுக்கு இணையாக பிரகாஷ்ராஜ் சம்பளம் கேட்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

    தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பிரபல வில்லன் நடிகராக இருக்கும் பிரகாஷ்ராஜுக்கு தொடர்ந்து படங்கள் குவிந்து வருகின்றன. இவர் கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் கேட்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதுகுறித்து பிரகாஷ்ராஜ் அளித்துள்ள பேட்டியில், ''ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் நான் நடித்த காஞ்சிவரம், இருவர், மேஜர், பொம்மரில்லு, ஆகாச மந்தா போன்றவற்றில் வாழ்க்கை இருந்தது. நடிப்பு என்பது ஒரு தொழில்.

    பிரகாஷ்ராஜ்

    அதில் வாழ்வதற்காக பணம் கிடைக்கிறது. கமர்ஷியல் படங்களுக்கு அதிக சம்பளம் வாங்கிக் கொண்டு எனக்கு பிடித்த படங்களுக்கு குறைத்த சம்பளம் வாங்கிக் கொள்வேன்.நம்மை சுற்றி மாறிக்கொண்டு இருக்கும் உலகத்தை சினிமாவில் காட்ட முடியாமல்தான் பெரிய நடிகர்கள் படங்கள் கூட தியேட்டரைவிட்டு போய் விடுகின்றன.

    பிரகாஷ்ராஜ்

    சூர்யா, விஜய் சேதுபதி, பஹத் பாசில், ய்ஷ், சாய் பல்லவி போன்றோருடன் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ள நடிகர்கள் கூட போட்டியிட வேண்டி இருக்கிறது. நட்சத்திர அந்தஸ்துக்கான அர்த்தம் தற்போது மாறிவிட்டது. வித்தியாசமான கதாபாத்திரங்களால் ரசிகர்களின் பாராட்டை பெறுபவர் தான் நிற்க முடியும். மக்களிடையே சினிமாவைப் பற்றிய நல்ல புரிதல் உள்ளது" என்றார்.

    Next Story
    ×