என் மலர்
சினிமா செய்திகள்

"எனது 25வது படத்தை நான்தான் தயாரிக்க வேண்டும் என எப்போதோ முடிவு செய்துவிட்டேன்" - படையப்பா குறித்து ரஜினிகாந்த்!
- ரஜினியின் 50வது வருடத்தை கொண்டாடும் விதமாக அவரது பிறந்தநாள் அன்று ரீரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.
- தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார் ரஜினிகாந்த்.
கடந்த 1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான படம் தான் படையப்பா. சிவாஜி கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தில், ரஜினிகாந்த், மறைந்த நடிகை சௌந்தர்யா, வில்லியாக ரம்யா கிருஷ்ணன், நாசர், செந்தில், ரமேஷ் கண்ணா, லட்சுமி, ராதாரவி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் இப்படம் திரைத்துரையில் ரஜினியின் 50வது வருடத்தை கொண்டாடும் விதமாக அவரது பிறந்தநாள் அன்று ரீரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு அவர் பேசும் வீடியோ ஒன்று வெளியாகும் என அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ நேற்றே (டிச.7) வரும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தாமதமானது. இந்நிலையில் வீடியோவை வெளியிட்டுள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த். அந்த வீடியோவில் படையப்பா படம் தொடர்பான தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார் ரஜினிகாந்த்.






