search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஜீவா
    X
    ஜீவா

    தடுப்பூசி போட்டு வேண்டுகோள் விடுத்த ஜீவா

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ஜீவா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    கொரோனா தொற்று வராமல் தடுக்க கோவிஷீல்டு, கோவாக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகளை இந்திய அரசு மக்களுக்கு வழங்கியுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக அந்த தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

    மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 18 வயதைக் கடந்த சினிமா பிரபலங்கள் தற்போது ஒவ்வொருவராக தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

    ஜீவா

    இந்நிலையில் நடிகர் ஜீவா கொரோனா தட்டுப்பூசி போட்டுக்கொண்டார். மேலும், அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்றும், வீட்டில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    Next Story
    ×